இலங்கை
மட்டு. மாவட்ட செயலரை சந்தித்த இராணுவ கட்டளை அதிகாரி!

மட்டு. மாவட்ட செயலரை சந்தித்த இராணுவ கட்டளை அதிகாரி!
மட்டக்களப்பு கல்லடி 243 இராணுவபடை பிரிவின் கட்டளை அதிகாரியாக நியமனம் பெற்று கடமையை பொறுப்பேற்றுக்கொண்ட இராணுவ கட்டளை அதிகாரி கேனல் பிரதீப்களுபான மற்றும் லெப்டினன் கேனல் இந்திக குமார ஆகியோர் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து மரியாதையின் நிமிர்த்தம் மாவட்ட செயலர் திருமதி. ஜஸ்டினா முரளிதரனை சந்தித்து கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார்.
கலந்துரையாடலின் போது மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் மாவட்ட செயலரிடம் இதன்போது தெரிவித்துள்ளார்.
243ஆவது இராணுவ படை பிரிவு கட்டளை அதிகாரியாக பணியாற்றிய பிரிகேடியர் சந்திம குமரசிங்க இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள நிலையில் மட்டக்களப்பு கல்லடி 243 இராணுவ படை பிரிவிற்கு புதிய இராணுவ கட்டளை அதிகாரியாக கேனல் பிரதீப் களுபான நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)