Connect with us

இலங்கை

நுவரெலியாவில் கொழுந்துகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து

Published

on

Loading

நுவரெலியாவில் கொழுந்துகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து

நுவரெலியாவில் தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியில் குடைசாய்ந்து ஏற்பட்ட விபத்தில்  நால்வர் காயமடைந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு (08) இடம்பெற்றுள்ளது.

Advertisement

விபத்தில் காயமடைந்த நால்வரும் நுவரெலியா மாவட்ட பொது  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா ஸ்கிராப் தோட்டத்தில் இருந்து பீட்ரு தேயிலை தொழிற்சாலைக்கு தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற லொறியொன்றே சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் குடைசாய்ந்து தேயிலை கொழுந்துடன் விபத்துக்குள்ளானதாக நுவரெலியா  பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னோக்கி சென்ற லொறியில் திடீரென தடுப்புக்கட்டை (பிரேக்) செயழிழந்ததன் காரணமாக பின்னோக்கி வந்து  குடைசாய்ந்துள்ளது 

Advertisement

இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன