Connect with us

இலங்கை

செம்மணிப் புதைகுழி விடயத்தில் நீதிமன்ற உத்தரவுக்கமையவே விசாரணைகள் இடம்பெறும்!

Published

on

Loading

செம்மணிப் புதைகுழி விடயத்தில் நீதிமன்ற உத்தரவுக்கமையவே விசாரணைகள் இடம்பெறும்!

அரசாங்கத்தின் நிலைப்பாடு இதுவே; அமைச்சர் நளிந்த உறுதி!

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்றம் வழங்கும் உத்தரவுக்கு அமைய உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Advertisement

செம்மணி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரப்பட்டுவரும் நிலையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:- செம்மணிப் புதைகுழியில் 2025 ஜூலை மாதம் 7ஆம் திகதி வரை 44 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட் டுள்ளன. அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது சம்பந்தப்பட்ட தரப்புகளால் விசாரணை அறிக்கைகள் முன்வைக்கப்படவுள்ளன.

நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றது. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரும் பொலிஸாரும் அதற்காக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். நீதிமன்றத்தின் தேவைக்கமைய அதற்குரிய விசாரணைகள் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும்- என்றார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன