Connect with us

இலங்கை

இரவில் மது அருந்தியவர் காலை சடலமாக மீட்பு; யாழில் சம்பவம்

Published

on

Loading

இரவில் மது அருந்தியவர் காலை சடலமாக மீட்பு; யாழில் சம்பவம்

  யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு நண்பர்களுடன் மது அருந்தியவர் இன்றைய தினம் (9) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் யாழ். நகர் பகுதியை சேர்ந்த அழகரத்தினம் கிறிஸ்டி பால்ராஜ் (வயது 48) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Advertisement

முழவை சந்திக்கு அருகில் உள்ள வீதியோர பூங்காவின் ஆல மரம் ஒன்றின் கீழ் இருந்து நேற்றைய தினம் , உயிரிழந்த நபரும் வேறு நபர்களும் இணைந்து மது அருந்தி கொண்டிருந்ததை அப்பகுதியை சேர்ந்தவர்கள் அவதானித்துள்ளார்கள்.

இந்நிலையில் குறித்த நபர் அவ்விடத்தில் இருந்து சடலமாக காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

Advertisement

மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

   

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன