Connect with us

இலங்கை

உழவு இயந்திரத்தில் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு

Published

on

Loading

உழவு இயந்திரத்தில் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு

   திருகோணமலையில் மோட்டார்சைக்கிளில் வந்த நபர் ஒருவர், உழவு இயந்திரத்துடன் மோதி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்றிரவு (09) திருகோணமலை, கோமரங்கடவல, புலிக்கண்டிகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

Advertisement

புலிக்கண்டிகுளம் சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோதியதினாலேயே இவ்விபத்து இடம்பெற்றதாகவும் தெரிய வருகின்றது.

விபத்தில் கோமரங்கடவல, பக்மீகம பகுதியைச் சேர்ந்த 28 வயதான லக்ஷ்மன் குணபால எனும் ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பிலான விசாரணைகளை கோமரங்கடவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன