இலங்கை
யாழ். கீரிமலைப் பகுதியில் வெடிகுண்டு ஒன்று மீட்பு

யாழ். கீரிமலைப் பகுதியில் வெடிகுண்டு ஒன்று மீட்பு
யாழ்ப்பாணம் – கீரிமலைப் பகுதியில் நேற்றையதினம் வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
கீரிமலை – புது கொலணி பகுதியில் உள்ள தனியார் காணொன்றில் குறித்த வெடி குண்டு இருப்பது அவதானிக்கப்பட்டது.
இந்நிலையில் தெல்லிப்பழை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
அந்தவகையில் நேற்றையதினம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த வெடிகுண்டை பாதுகாப்பாக மீட்டு சென்றுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.