Connect with us

இந்தியா

இந்திய விமானப்படை விமானம் விபத்து; இருவர் பலி!

Published

on

Loading

இந்திய விமானப்படை விமானம் விபத்து; இருவர் பலி!

ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தின் பானுடா கிராமத்திற்கு அருகே நேற்று மாலை ஜாகுவார் போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இந்திய விமானப்படை விமானி உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஐந்து மாதங்களில் பதிவான மூன்றாவது விபத்து இதுவாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

முதற்கட்ட விசாரணைகளின்படி, விமானியின் உடலுடன், விமானத்தின் இடிபாடுகள் ஒரு வயலில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், உடல் கடுமையாக சேதமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் உயிரிழந்த விமானி மற்றும் மற்றொரு நபரின் அடையாளங்கள் இன்னும் இராணுவம் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தால் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

போர் விமானம் பயிற்சிப் பயணத்தில் ஈடுபட்டிருந்தபோது விபத்து நடந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், ஆரம்ப விசாரணையை முடித்த பின்னர் இராணுவம் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன