Connect with us

இலங்கை

இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அபிவிருத்திக்காக 1400 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

Published

on

Loading

இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அபிவிருத்திக்காக 1400 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

இந்த ஆண்டு (2025) சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டத்தில் நாட்டின் அபிவிருத்திக்காக 1,400 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இது குறித்த தகவல்களை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ளார். 

Advertisement

இந்த ஆண்டு இறுதிக்குள் பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைய இந்த நிதி திறம்பட பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வது அரசியல் தலைமைகள் மற்றும் அரச அதிகாரிகள் இருவரின் பொறுப்பு என்று ஜனாதிபதி கூறியுள்ளார். 

அரசியல் அதிகாரம் மற்றும் அரச அதிகாரிகள் எடுக்கும் முடிவுகளுக்கு இதில் ஈடுபடாத பொதுமக்கள் பலியாகிவிட்டதாகவும், இந்த நிலைமை நீடிக்கக்கூடாது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்த ஆண்டு 5% பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்பதை எடுத்துரைத்த ஜனாதிபதி, அதிகரித்த அரச முதலீடுகள் இந்த வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

images/content-image/1752272465.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன