Connect with us

இலங்கை

பண்ணையாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Published

on

Loading

பண்ணையாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

அநுராதபுத்தில் உள்ள கால்நடைப் பண்ணைகளில் ஆயிரத்துக்கும்க்கும் மேற்பட்ட பன்றிகள் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளன. இதனால் அங்குள்ள பண்ணையாளர்கள் பெரும் சோகத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது.

பன்றிகள் அடையாளம் காணப்படாத வைரஸ் தொற்றுக்குள்ளாகி இரண்டே நாட்களில் உயிரிழந்துள்ளதுடன்வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாகவும் தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் மற்றைய பகுதிகளுக்கும் பரவும் அபாயம் உள்ளதாகவும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

குறித்த பகுதியில் 20 பண்ணைகள் உள்ளநிலையில் அவை அனைத்திலும் வைஸ் தொற்று பரவியுள்ளது. ஒரு பண்ணையில் 800 பன்றிகளில் 200க்கும் மேற்பட்டவை உயிரிழந்துள்ளன. மற்றைய பண்ணைகளில் 60 பன்றிகள் உயிரிழந்துள்ளன.  மேலும்இ ஒவ்வொரு பண்ணையிலும் நூற்றுக்கணக்கான பன்றிக்குட்டிகள் உயிரிழந்துள்ளன. 

இதேவேளை  வைரஸ் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான மருந்துகள் கால்நடை அலுவலகங்களில் இல்லை எனவும் இருப்பினும் பாதிக்கப்பட்ட பன்றிகளை பார்வையிட்டு  இதுவரை வைரஸ் தொற்றுக்குள்ளாகாத பன்றிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம் எனவும் நுவரகம்பலாத்த மத்திய கால்நடை மருத்துவ நிபுணர் மருத்துவர் பிரசாத் மருத்துவ தெரிவித்துள்ளார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன