சினிமா
இயக்குநர் பாண்டிராஜ் உடன் இணையும் ஜெயம் ரவி!

இயக்குநர் பாண்டிராஜ் உடன் இணையும் ஜெயம் ரவி!
[ புதியவன் ]
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஜெயம் ரவி.
இவர் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கும் “காதலிக்க நேரமில்லை” படத்தில் நடித்துள்ளார்.
ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது.
இந்த நிலையில், ஜெயம் ரவி நடிக்கும் புதிய படம் தொடர்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஜெயம் ரவி அடுத்து நடிக்க இருக்கும் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தை அடங்கமறு மற்றும் சைரன் படங்களை தயாரித்த ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் ஆரம்பிக்கபோகின்றது.
இந்த படம் கிராம பின்னணியில் உருவாகும் குடும்ப பொழுதுபோக்கு கதையம்சம் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.இயக்குநர் பாண்டிராஜ் கடைசியாக இயக்கிய எதற்கும் துணிந்தவன் படம் வசூல் ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது.[ ஒ ]