Connect with us

உலகம்

சித்திரவதைக்குள்ளான இலங்கைப்பெண் !

Published

on

Loading

சித்திரவதைக்குள்ளான இலங்கைப்பெண் !

(புதியவன்)

சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப் பெண்ணாக பணிபுரிந்த  இலங்கை பெண் ஒருவர் கடுமையான சித்திரவதைக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இவ்வாறாக வீட்டின் உரிமையாளரால் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளானதால் தன்னை விரைவில்  இலங்கைக்கு அழைக்குமாறு பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை விடுத்துள்ளார். ஹொரவ்பொத்தானை – வில்லேவாவவில் வசிக்கும் 38 வயதுடைய  பெண்ணே இவ்வாறு சித்தரவதைக்கு உள்ளாகியுள்ளார்.

 கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் வீட்டு வேலைக்காக சவுதி அரேபியா சென்றுள்ள நிலையில் தனது சேவைக் காலம் முடிவதற்குள் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தான் பணி புரியும் வீட்டின் உரிமையாளர்கள் தம்மை பல்வேறு வகைகளில் சித்திரவதை செய்வதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.(ஞ)

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன