இலங்கை
இந்தியவின் ஆபத்தான குகையில் வசித்த ரஷ்யப் பெண் மற்றும் பிள்ளைகள் ; அதிர்ச்சி கொடுத்த காரணம்

இந்தியவின் ஆபத்தான குகையில் வசித்த ரஷ்யப் பெண் மற்றும் பிள்ளைகள் ; அதிர்ச்சி கொடுத்த காரணம்
கர்நாடகாவில் ஆபத்தான இடத்தில் உள்ள குகை ஒன்றில் வசித்து வந்த ரஷ்யப் பெண்ணையும் அவரது இரண்டு பெண் பிள்ளைகளையும் இந்திய பொலிஸார் மீட்டுள்ளனர்.
பொலிஸாரின் விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த பெண்ணை கண்டுபிடித்துள்ளனர்.
ரஷ்யாவைப் பூர்வீகமாகக் கொண்ட 40 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
தியானம் மற்றும் பிரார்த்தனைக்கு அமைதியான இடத்தை தேடியே குறித்த குகைக்குள் வசித்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் அவர் கூறியுள்ளார்.
குறித்த ரஷ்யப் பெண்ணை மீட்ட பொலிஸார் அவரின் கோரிக்கைக்கு ஏற்ப ஆன்மிக மடம் ஒன்றில் அவரையும் அவரது பிள்ளைகளையும் தங்க வைத்துள்ளனர்.