இலங்கை
அரை நிர்வாணமாக வீதியில் சென்ற வெளிநாட்டுப் பெண்; பொலிஸார் க்ஷாக்

அரை நிர்வாணமாக வீதியில் சென்ற வெளிநாட்டுப் பெண்; பொலிஸார் க்ஷாக்
மேலாடையின்றி வீதியில் நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் , அம்பாறை – பொத்துவில் பொலிஸ் நிலைய மகளிர் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பீச் ஹட் ஹோட்டலில் இருந்து ஓஷன் ஸ்கை ஹோட்டலின் நுழைவாயில் வரை நிர்வாணமாக நடந்து சென்றுள்ளார்.
இந்தப் பெண் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் என பொத்துவில் பொலிஸ் நிலைய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொத்துவில் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பெண் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்று சென்று பெண்ணைக் கைது செய்து பொத்துவில் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
கைதான வெளிநாட்டு பெண் பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.