Connect with us

இலங்கை

இன்று நள்ளிரவு முதல் தபால் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்!

Published

on

Loading

இன்று நள்ளிரவு முதல் தபால் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்!

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி நாடு தழுவிய தபால் நிலையங்கள் மற்றும் நிர்வாக அலுவலகங்களில் இன்று (15) நள்ளிரவு 12 மணி முதல் மேலதிக நேர வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. 

2016ஆம் ஆண்டு முதல் தபால் துறையில் முறையான ஆட்சேர்ப்பு நடைபெறவில்லை என்பது இந்தப் போராட்டத்தின் முக்கிய காரணமாகக் கூறப்பட்டுள்ளது. 

Advertisement

இதனால் ஏற்பட்ட பணியாளர் பற்றாக்குறை, தற்போதைய ஊழியர்கள் மீது அதிக வேலைப்பளு மற்றும் மேலதிக நேரப் பணி அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி, ஆட்சேர்ப்பு உள்ளிட்ட நிலுவையிலுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன