Connect with us

இலங்கை

துபாய் – கொழும்பு இடையே ஜூலை 18 முதல் புதிய விமான சேவை!

Published

on

Loading

துபாய் – கொழும்பு இடையே ஜூலை 18 முதல் புதிய விமான சேவை!

   ஜூலை 18 முதல் துபாய் மற்றும் கொழும்பு இடையே சர்வதேச விமான நிறுவனமான எமிரேட்ஸ், புதுப்பிக்கப்பட்ட நான்கு வகுப்பு போயிங் 777 விமானம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

புதிதாக கட்டமைக்கப்பட்ட மற்றும் புதுப்பிக்கப்பட்ட கேபின்களுடன் மேம்படுத்தப்பட்ட விமானங்களின் சேவைகள், இலங்கையில் பிரீமியம் எகானமி இருக்கைகளைக் கொண்ட விமான நிறுவனத்தின் இரண்டாவது தினசரி விமானமாக இந்த விமானம் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

எமிரேட்ஸின் EK650 விமானம் துபாயிலிருந்து 02:40 மணிக்குப் புறப்பட்டு 08:35 மணிக்கு கொழும்பை வந்தடைகிறது.

எமிரேட்ஸ் விமானம் EK651 கொழும்பிலிருந்து 10:05 மணிக்குப் புறப்பட்டு 12:55 மணிக்கு துபாய் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரீமியம் எகானமி டிக்கெட்டுகளை உடனடியாக emirates.com, எமிரேட்ஸ் ஆப் அல்லது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பயண முகவர்கள் மூலமாகவும், டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்றும் எமிரேட்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன