இலங்கை
நியமனம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்: கல்வியமைச்சுக்கு முன்பாக பதற்றம்

நியமனம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்: கல்வியமைச்சுக்கு முன்பாக பதற்றம்
ஆசிரியர் சேவையில் பணியமர்த்தி, நிரந்தர நியமனம் வழங்கக் கோரி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இசுறுபாய முன்பாக முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரை கலைக்க பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சில பொலிஸ் உத்தியோகர்கள் காயமடைந்துள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
மேலும், பொரளை – கொட்டாவ 174 பஸ் வீதியின் போக்குவரத்தும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.