இலங்கை
வவுனியாவில் ரயிலில் மோதி ஒருவர் பலி!

வவுனியாவில் ரயிலில் மோதி ஒருவர் பலி!
வவுனியா ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று புதன்கிழமை (16) இரவு ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இரவுநேரை தபால் ரயிலில் மோதியே இவர் உயிரிழந்துள்ளார்.
இது உயிர்மாய்ப்பா அல்லது விபத்தா என்பது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.