Connect with us

இலங்கை

வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி பணம் திருடில் ஈடுபட்ட மாணவன் கைது!

Published

on

Loading

வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி பணம் திருடில் ஈடுபட்ட மாணவன் கைது!

இணையவழி ஊடாக நபரொருவரின் வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி 5 இலட்சம் ரூபா பணத்தை திருடியதாக கூறப்படும் பல்கலை மாணவன் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை (17) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ருஹுனு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Advertisement

கைதுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவன் வவுனியா – புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் ஆவார். 

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபரான பல்கலைக்கழக மாணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட மாணவனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன