Connect with us

இலங்கை

கோர விபத்தில் சிக்கிய வேன்; நால்வர் பலி!

Published

on

Loading

கோர விபத்தில் சிக்கிய வேன்; நால்வர் பலி!

ஹுன்னஸ்கிரிய – மீமுரே கரபகொல்ல பகுதியில் நேற்று பிற்பகல் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 04 ஆக உயர்ந்துள்ளது.

மீரிகம பகுதியைச் சேர்ந்த ஒரு குழு சுற்றுலாவிற்காக மீமுரே பகுதிக்கு சென்றபோது இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளனர். 

Advertisement

குறித்த விபத்தில் சிக்கிய வேன், மேல் வளைவிலிருந்து கீழ் வளைவுக்கு 30 மீட்டர் செங்குத்தான பிரதான சாலையில் உருண்டு, மீண்டும் பிரதான சாலையின் அருகே நின்றது.

விபத்தில் இறந்தவர்களில் மூன்று பெண்களும் ஒரு ஆணும் அடங்குவர்.

மற்றொரு சிறு குழந்தையும் படுகாயமடைந்து தெல்தெனியா அடிப்படை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது .

Advertisement

விபத்து நடந்த நேரத்தில் வேனில் 6 பேர் இருந்துள்ளதுடன்,

மேலும் வாகனத்தில் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அப்பகுதி மக்கள் நடவடிக்கை எடுத்தனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன