இலங்கை
பாழடைந்த வீட்டில் இளைஞனின் சடலம்; போதைக்கு அடிமை எனத் தகவல்!!!

பாழடைந்த வீட்டில் இளைஞனின் சடலம்; போதைக்கு அடிமை எனத் தகவல்!!!
போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையான இளைஞர் ஒருவர் பாழடைந்த வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் . யாழ்ப்பாணம் பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நண்பர்கள் அவரை யாழ்ப்பாணம் மருத்துவமனையில் சேர்த்த போதும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டாரென மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்று விசாரணைகளின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.