இந்தியா
கர்நாடகா பேருந்து விபத்தில் மூவர் சாவு!

கர்நாடகா பேருந்து விபத்தில் மூவர் சாவு!
கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டத்தின் சிரா பகுதியில் அமைந்துள்ள நெஞ்சாலையில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரழந்துள்ளதுடன் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த பேருந்து இன்று அதிகாலை 04.30 மணியளவில் நெடுஞ்சாலையின் வீதிப் பிரிப்பு நடுச்சுவருடன் மோதுண்டே விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த பயணிகள் சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. (ச)