Connect with us

சினிமா

2 ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்கில் மீண்டும் ஹீரோயினாக வரும் சமந்தா..!வெளியான தகவல் இதோ…!

Published

on

Loading

2 ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்கில் மீண்டும் ஹீரோயினாக வரும் சமந்தா..!வெளியான தகவல் இதோ…!

பிரபல நடிகையான சமந்தா தனது தயாரிப்பு நிறுவனமான Tralala Moving Pictures தொடங்கி, அதன் கீழ் தயாரித்த முதல் திரைப்படமாக ‘சுபம்’ கடந்த மே 9ஆம் தேதி வெளியானது. விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம், ஓடிடி தளத்தில் வெளியான பிறகு இன்னும் அதிகமான பாராட்டுகளை பெற்றது. இதன் சிறப்பாக, சமந்தா இந்தப் படத்தில் ஒரு கேமியோ (சிறிய) கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இந்நிலையில், சமந்தா மீண்டும் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு தெலுங்கு திரையுலகில் முக்கிய கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புதிய படத்தை ‘ஓ பேபி’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘ஓ பேபி’ படத்திலும் சமந்தா நாயகியாக நடித்ததையும், அந்த படம் ஒரு  Blockbuster ஹிட்டாகியது.தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் மட்டுமின்றி, சமந்தா தற்போது இந்தி திரைப்படங்களிலும், வெப் தொடர்களிலும் தனது திறமையை காட்டி வருகிறார். ‘ஃபேமிலி மான் சீசன் 2’, ‘சிட்டாடெல்’, ‘ஹனி பனி’ போன்ற வெற்றித் தொடர்களில் அவர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும், நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ள ‘ரக்த் பிரமந்த்’ என்ற திரைப்படத்தில் சமந்தா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன