Connect with us

இலங்கை

காதலனை காப்பாற்ற போய் உயிரிழந்த காதலி

Published

on

Loading

காதலனை காப்பாற்ற போய் உயிரிழந்த காதலி

  மஹியங்கனை பொலிஸ் பிரிவின் 17வது தூண் பகுதியில் உள்ள வியானா கால்வாயில், தனது காதலனைக் காப்பாற்ற முயன்றபோது நீரில் மூழ்கி காணாமல் போன இளம் பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டையைச் சேர்ந்த 26 வயதுடைய ரஜரட்ட பல்கலைக்கழக மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Advertisement

நேற்று (20) மாலை 5 மணியளவில் கால்வாயின் பலத்த நீரோட்டம் காரணமாக, கால்வாயின் குறுகிய வரம்பில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, இளைஞன் வழுக்கி கால்வாயில் விழுந்துள்ளார்.

இதன்போது, அவரைக் காப்பாற்ற முயன்ற காதலியும் கால்வாயில் விழுந்துள்ளார்.

சம்பவ இடத்தில் இருந்த மஹியங்கனை பொலிஸ் பயிற்சிப் பாடசாலை அதிகாரி ஒருவரும் அவரது மனைவியும் உடனடியாக குதித்து இளைஞனைக் காப்பாற்றினர்.

Advertisement

இருப்பினும், இளம் பெண்ணைக் காப்பாற்ற முடியவில்லை. அவரை தேடி பொலிஸாரும் உள்ளூர் மக்களும் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில் இன்று (21) காலை அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.  

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன