இலங்கை
6 மாதங்களில் 36,000 புற்றுநோயாளர்கள்

6 மாதங்களில் 36,000 புற்றுநோயாளர்கள்
2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் 36 ஆயிரம் புற்றுநோயாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் எனச் சுகாதாரப் பிரதி அமைச்சர் மருத்துவர் ஹன்சக விஜேமுனி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த் ராணி கிரியெல்லவின் கேள்விக்குப் பதிலளிக்கும்போது, தினசரி சராசரியாக 950 முதல் ஆயிரம் நோயாளிகள் கிளினிக்குகள் சேவைக்காக வருகைதருகின்றனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.