இலங்கை
இலங்கையில் அதிகரித்த நீர் மின் உற்பத்தி.. மின்சார கட்டணம் குறைவடையுமா?

இலங்கையில் அதிகரித்த நீர் மின் உற்பத்தி.. மின்சார கட்டணம் குறைவடையுமா?
நாட்டில் தற்போது நிலவிவரும் மழையுடனான வானிலை காரணமாக நீர் மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து அதிக அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக மின்சார சபை தரவுகள் தெரிவிக்கின்றன.
இதன்படி, நேற்றையதினம் (01-12-2024) இலங்கையின் மொத்த மின்சாரத் தேவையில் 62.2% ஆன மின்சாரம் நீர் மின் நிலையங்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் 35% முதல் 40% வரை மின்சாரக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க தெரிவித்துள்ளார்.