இலங்கை
தமிழர் பகுதி ஒன்றில் சுகாதாரப் பிரிவின் அதிரடி சோதனை

தமிழர் பகுதி ஒன்றில் சுகாதாரப் பிரிவின் அதிரடி சோதனை
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட முத்தையன்கட்டு பொது சுகாதார பிரிவு பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் பல்பொருள் வணிகங்கள் பொது சுகாதார பரிசோதகர்களினால் திடீர் பரிசோதனை ஒன்று இன்றையதினம் (25) மேற்கொள்ளப்பட்டிருந்து.
குறித்த நடவடிக்கையில் முத்தையன்கட்டு வலதுகரை, முத்தையன்கட்டு இடதுகரை
பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் பல்பொருள் வணிகங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டு அழிப்பு செய்யப்பட்டதுடன் சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
முத்தையன்கட்டு பொது சுகாதார பரிசோதகர் லோஜிதன் , ஒட்டுசுட்டான் பொதுச்சுகாதார பரிசோதகர் டிலக்சன் ஆகியோர் இணைந்து குறித்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.