Connect with us

இலங்கை

காட்டுக்குள் சென்று மாயமான வாய் பேச முடியாத குடும்பபெண் ; தீவிரமாகும் தேடுதல்

Published

on

Loading

காட்டுக்குள் சென்று மாயமான வாய் பேச முடியாத குடும்பபெண் ; தீவிரமாகும் தேடுதல்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள லக்கம் தனியார் தோட்டத்தில் உள்ள பெண் நேற்று முன்தினம் 25 ம் திகதி விறகு சேகரிக்க சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.

 தோட்ட தொழிலாளர்கள் மஸ்கெலியா பொலிசார் மற்றும் ரக்காடு கிராமத்தில் உள்ள அதிரடி படையினர் இணைந்து மூன்றாவது நாளாக தொடர்ந்தும் தேடி வருகின்றனர்.

Advertisement

  குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள லக்கம் தனியார் தோட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற வாய் பேச முடியாத 56 வயது மதிக்க தக்க குழந்தையின் தாய் நேற்று முன்தினம் 25 ம் திகதி காலை 8.30 மணிக்கு அதே தோட்டத்தில் உள்ள பகுதியில் விறகு சேகரிக்க சென்று வீடு திரும்பவில்லை

இந்நிலையில் அவரை காணவில்லை என மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது

Advertisement

இது குறித்து மஸ்கெலியா பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூன்றாவது நாளாக இன்று காலை  முதல் ரக்காடு பகுதியில் உள்ள அதிரடி படையினர் மற்றும் மஸ்கெலியா பொலிசார் லக்கம் தனியார் தோட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு பட்டு வருகின்றனர்.

இன்று காலை முதல் மீண்டும் அதிரடி படையினர் மற்றும் மஸ்கெலியா பொலிசார் லக்கம் தனியார் தோட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் தற்போது வரை தேடும் பணி தொடர்ந்து இடம் பெற்று வருகிறது.

Advertisement

இருந்த போதிலும் தற்போதைய நேரம் வரை அவரை கண்டு பிடிக்க முடியவில்லை எனவும் தொடர்ந்தும் தோட்ட தொழிலாளர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன