Connect with us

இலங்கை

வாய்க்காலில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட காட்டு யானை!

Published

on

Loading

வாய்க்காலில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட காட்டு யானை!

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் அமைந்துள்ள வாய்க்காலில் இருந்து காட்டுயானை ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று (27) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

இந்தநிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த சேருநுவர வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

யானையின் உயிரிழப்புக்கான தெளிவான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

எனினும், யானையின் உடலில் வெளிப்படையான காயங்கள் அல்லது களவுக் குறியீடுகள் எதுவும் இல்லாத நிலையில், மரணத்துக்கான காரணத்தை உறுதி செய்ய உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிகின்றனர்.

Advertisement

இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

யானை உயிரிழப்பு தொடர்பான சூழ்நிலைகள் மேலும் விசாரிக்கப்பட்டு, தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன