இலங்கை
கோட்டாபயவே காரணம்! நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்த தேசபந்து!

கோட்டாபயவே காரணம்! நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்த தேசபந்து!
பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன், தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த நிலுவையில் உள்ள பிணை மனு மீதான உத்தரவை கோட்டை நீதிவான் நிலுபுலி லங்காபுர அறிவிக்க முடிவு செய்துள்ளார்.
குறித்த வழக்கு நேற்று (29) இடம்பெற்ற நிலையில் அவர் இந்த முடிவை வெளிப்படுத்தியுள்ளார்.
முன்னாள் சிறிலங்கா அதிபர், கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிந்து தான் செயல்பட்டதாகவும், தனது சொந்த விருப்பப்படி எதையும் செய்யவில்லை என்றும் தேசபந்து வாதிட்டுள்ளார்.