இலங்கை
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் ; சபாநாயகர் அதிரடி!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் ; சபாநாயகர் அதிரடி!
25 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன எச்சரிக்கை கடிதங்களை அனுப்பியுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணையத்தின் அறிவிப்பின்படி, சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளை சரியான நேரத்தில் சமர்ப்பிக்கத் தவறிய 25 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், கிட்டத்தட்ட நூறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன எச்சரிக்கை கடிதங்களை அனுப்பியுள்ளார்.
சொத்து மற்றும் பொறுப்புச் சட்டத்தின்படி, ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 ஆம் திகதி வரை வைத்திருக்கும் அனைத்து சொத்துக்களின் விவரங்களையும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் சபாநாயகரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இதற்கிடையில், சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளைச் சமர்ப்பிக்கத் தவறிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.