Connect with us

வணிகம்

மினிமம் பேலன்ஸ் அபராதம் இல்லை… ஆனாலும் ரூ.9,000 கோடி சம்பாதித்த வங்கிகள்!

Published

on

PSBs minimum balance non maintenance Rs 9000 crore over 5 years Tamil News

Loading

மினிமம் பேலன்ஸ் அபராதம் இல்லை… ஆனாலும் ரூ.9,000 கோடி சம்பாதித்த வங்கிகள்!

குறைந்தபட்ச சராசரி மாதாந்திர இருப்பு (மினிமம் பேலன்ஸ்) என்பது ஒரு வாடிக்கையாளர் தனது வங்கி கணக்கில் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச இருப்பு தொகையாகும். இந்தத் தொகை தேவையான அளவை விடக் குறைந்தால், வங்கிகள் அபராதம் விதிப்பது வழக்கம். இந்த அபராதம் சேமிப்பு கணக்கின் வகையை பொறுத்து மாறுபடும். இந்நிலையில், பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் வங்கி, கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற பொதுத் துறை வங்கிகள், இந்த விதிமுறையை தளர்த்தி உள்ளன. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்வாடிக்கையாளர் சேவையில் முன்னேற்ற காணும் விதமாக மினிமம் பேலன்ஸ் பராமரிக்காவிட்டால் அபராதம் விதிப்பது இல்லை என்று தெரிவித்துள்ளன. இந்நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில், தங்கள் சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச சராசரி மாதாந்திர இருப்பை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடமிருந்து பொதுத்துறை வங்கிகள் சுமார் ரூ.8,932.98 கோடியை அபராதமாக வசூலித்திருப்பதாக நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பகிர்ந்து கொண்ட தரவுகளின்படி, 2020-21 முதல் 2024-25 வரையிலான ஐந்து ஆண்டுகளில் குறைந்தபட்ச சராசரி மாதாந்திர இருப்பை பராமரிக்காததற்காக ரூ.8,932.98 கோடியை அபராதமாக வசூலித்திருக்கிறது. நிதி அமைச்சகத்தால் பகிரப்பட்ட தரவுகளின் படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட மொத்த ரூ.8,932.98 கோடி அபராதத்தில், அதிகபட்ச தொகையை ஈட்டியது இந்தியன் வங்கிதான். அதன்படி, ரூ.1,828.18 கோடியை இந்தியன் வங்கி வசூலித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.1,662.42 கோடியுடன் இரண்டாவது இடத்திலும், பேங்க் ஆஃப் பரோடா ரூ.1,531.62 கோடியுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.கனரா வங்கி ரூ.1,212.92 கோடியும், பேங்க் ஆஃப் இந்தியா ரூ.809.66 கோடியும், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி ரூ.585.36 கோடியும் அபராதமாக வசூலித்துள்ளன. மேலும், பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா ரூ.535.20 கோடியும், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா: ரூ.484.75 கோடியும், பஞ்சாப் & சிந்து பேங்க் ரூ.100.92 கோடியும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி: ரூ.62.04 கோடியும் அபராதமாக வசூலித்துள்ளனகடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த அபராதங்கள் எவ்வாறு அதிகரித்துள்ளன என்பதையும் நிதி அமைச்சகம் விளக்கமளித்தது. அதன்படி, 2020-21ஆம் ஆண்டில் ரூ.1,142.13 கோடியாக இருந்த இந்த அபராதம், அடுத்தடுத்த ஆண்டுகளில் 25% முதல் 30% வரை அதிகரித்து, 2023-24ல் ரூ.2,331.08 கோடியாக உயர்ந்தது. ஆனாலும், 2024-25ஆம் ஆண்டில் இந்தத் தொகை 7% சரிந்து ரூ.2,175.81 கோடியாகக் குறைந்துள்ளது.பல பொதுத்துறை வங்கிகளின் மினிமம் பேலன்ஸ் அபராதத்தை ரத்து செய்யும் இந்த முடிவு, அவர்களின் நடப்புக் கணக்கு மற்றும் சேமிப்புக் கணக்கு (சி.ஏ.எஸ்.ஏ – CASA) விகிதத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சி.ஏ.எஸ்.ஏ கணக்குகள்தான் வங்கிகளுக்கு மிகக் குறைந்த செலவில் நிதி திரட்ட உதவும் ஆதாரங்களாக இருந்து வருகின்றன. இந்திய ரிசர்வ் வங்கியும், வங்கிகளின் பொறுப்புகளில் மலிவான சி.ஏ.எஸ்.ஏ-க்கு பதிலாக அதிகபட்ச நிலையான வைப்புத்தொகை மற்றும் வைப்புச் சான்றிதழ்களின் பங்கு அதிகரித்து வருவதாகக் கூறியுள்ளது. இதுபோன்ற சூழலில், மினிமம் பேலன்ஸ் அபராதத்தை நீக்கும் முடிவு, வங்கிகளின் நிதி ஆதாரத்தில் புதிய சவால்களை ஏற்படுத்தலாம்.ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பராமரிப்பு இல்லாத கட்டணங்களை வசூலிக்காத ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, முதல் முறையாக கணக்கு வைத்திருப்பவர்களுக்கு உதவ அதன் நகர்வு உதவியைக் கண்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன