இலங்கை
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெருவதை முன்னிட்டு கருத்தரங்குகள், தனியார் வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 10 ஆம் திகதி நடைபெறும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள், வினாத்தாள் விநியோகம், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்கு 6 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.