இலங்கை
பொலிஸ் திணைக்களத்தில் பாரிய மாற்றம்! அமைச்சர் ஆனந்த விஜேபால கருத்து!

பொலிஸ் திணைக்களத்தில் பாரிய மாற்றம்! அமைச்சர் ஆனந்த விஜேபால கருத்து!
இன்னும் இரண்டு வருடங்களுக்குள்பொலிஸ் திணைக்களத்தில் தலைகீழான மாற்றங்களை மேற்கொள்ளப் போவதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் சிறப்பான திணைக்களங்களில் ஒன்றாகபொலிஸ் திணைக்களத்தை மாற்றும் நடவடிக்கைகள் தற்போதைக்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்னும் இரண்டு வருடங்களுக்குள் குறித்த மாற்றம் ஏற்படுத்தப்படும். அதற்கான தரநிலைகளை தற்போதைக்கு உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம்.
பொலிஸ் திணைக்களத்திற்கான கௌரவம், அங்கீகாரம் என்பவற்றை அதிகரித்துக் கொள்வதற்கான செயற்பாடுகளை இடைவிடாது முன்னெடுக்கவுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.