Connect with us

இலங்கை

எசல பெரஹெராவில் பாடசாலை மாணவர் உள்ளிட்ட மூவர் கைது

Published

on

Loading

எசல பெரஹெராவில் பாடசாலை மாணவர் உள்ளிட்ட மூவர் கைது

கண்டி எசல பெரஹெராவில் கொழும்பைச் சேர்ந்த பாடசாலை மாணவர் ஒருவர், கண்டி எசல பெரஹெரா பகுதிக்குள் இரண்டு தோட்டாக்களுடன் நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டார்.

எசல பெரஹெராவில்   பங்கேற்பதற்காக சென்றிருந்த யானைப் பாகன் ஒருவர், 100 கிராம் ஹெரோயினுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

கொழும்பிலுள்ள கோயில் ஒன்றிலிருந்து யானையுடன் குறித்த பாகன் கண்டி எசல பெரஹராவுக்கு சென்றிருந்தார்.

இதனையடுத்து, அவர் ஹெரோயின் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிலையில், எசல பெரஹெராவில் குறித்த யானை பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பாதுகாப்புப் படையினரின் நோயாளர் காவு வண்டி ஓட்டுநர் ஒருவர் மூன்று T-56 ரக தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டார்.

Advertisement

கண்டியின் சோதனைச் சாவடி ஒன்றில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த மூவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன