Connect with us

இலங்கை

இலங்கையில் நேர்ந்த துயரம் ; கழிவு நீர் குழியில் வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

Published

on

Loading

இலங்கையில் நேர்ந்த துயரம் ; கழிவு நீர் குழியில் வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

ஹட்டன் பொகவந்தலாவைச் சேர்ந்த 8 வயது சிறுவன் ஒருவர் கழிவுநீர் குழியில் விழுந்து உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தத் துயரமான சம்பவம் இன்று (03.08.2025) மாலை 7 மணியளவில், பொகவந்தலாவா காவல்துறை பிரிவிற்குட்பட்ட கிவ் தோட்டத்தின் கீழ் பிரிவில் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

உயிரிழந்த சிறுவனின் உடல் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொகவந்தலாவ காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன