இலங்கை
ஐஸ் போதை பொருட்களுடன் ஏழு சந்தேக நபர்கள் கைது!

ஐஸ் போதை பொருட்களுடன் ஏழு சந்தேக நபர்கள் கைது!
ஐஸ் போதை பொருட்களுடன் ஏழு சந்தேக நபர்கள் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பிரதேசங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய கற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ் நந்தன தெரிவித்தார்.
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி, புதிய காத்தான்குடி, பாலமுனை,பூநொச்சிமுனை போன்ற பிரதேசங்களில் வைத்து ஐஸ் போதை பொருட்களுடன் மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிசார் நடத்திய திடீர் சுற்றிவளைப்பின் போதே ஐஸ் போதை பொருளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 2520 மில்லி கிராம் ஐஸ் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.