Connect with us

இலங்கை

மாமியாரை கழுத்து நெரித்து கொலை; மருமகன் வெறிச்செயல்

Published

on

Loading

மாமியாரை கழுத்து நெரித்து கொலை; மருமகன் வெறிச்செயல்

  இரத்தினபுரி பிரதேசத்தில் தனது மாமியாரை கழுத்து நெரித்து கொலை செய்த மருமகன் கைதுசெய்யப்பட்டதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் நேற்றைய தினம்(3) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

74 வயதுடைய மாமியாரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

இரத்தினபுரி -டிப்போ சந்தி பகுதியில் உள்ள வீடொன்றில் சடலம் ஒன்று கிடப்பதாக இரத்தினபுரி பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Advertisement

பொலிஸாரின் விசாரணைகளில், மருமகனுக்கும் மாமியாருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேக நபரான மருமகன் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் ,
கைதுசெய்யப்பட்டவர் 29 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன