இலங்கை
அரசியல் வாதியின் மகன் சுட்டுக் கொலை ; நீதிமன்றம் வழங்கிய அதிரடி தண்டனை

அரசியல் வாதியின் மகன் சுட்டுக் கொலை ; நீதிமன்றம் வழங்கிய அதிரடி தண்டனை
லக்கல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் தர்மசிறி கங்கனங்கரவின் மகனை சுட்டுக் கொன்றதுடன், அவருடன் இருந்த மற்றொருவரை சுட்டுக் காயப்படுத்திய வழக்கில் இரண்டு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மாத்தளை மேல் நீதிமன்ற நீதிபதி இன்று (05) குறித்த உத்தரவைப் பிறப்பித்தார்.
லக்கல, கோனவெலவைச் சேர்ந்த ஏகநாயக்க முதியன்சலாகே துசித தசநாயக்க மற்றும் கொஸ்கஹஹேனைச் சேர்ந்த கெதர சமரசூரிய ஆகியோருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.