இலங்கை
மின்சார சபைக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

மின்சார சபைக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
அடுத்த மாதம் 6 ஆம் திகதிக்கு முன்னர் மின் கட்டணத் திருத்த முன்மொழிவுகளை முன்வைக்க இலங்கை மின்சார சபைக்குப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு 2 வாரகால அவகாசத்தை வழங்கியுள்ளது.
அந்த ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்கட்டணத் திருத்த முன்மொழிவுகளை வழங்கத் தவறினால் இலங்கை மின்சார சபையின் இலாபத்திலிருந்து நுகர்வோருக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்
திருத்த யோசனைத் தயாரிப்புக்காக இலங்கை மின்சார சபை இரண்டு சந்தர்ப்பங்களில் கால அவகாசத்தைக் கோரியிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.[ஒ]