Connect with us

இலங்கை

யாழில் ஆலயங்களில் நகை திருட்டில் ஈடுபட்ட எட்டு பெண்கள் கைது!

Published

on

Loading

யாழில் ஆலயங்களில் நகை திருட்டில் ஈடுபட்ட எட்டு பெண்கள் கைது!

யாழ்ப்பாணத்தில் ஆலயங்களில் தங்க நகை திருட்டில் ஈடுபட்டு வந்த 8 பெண்கள் கொண்ட குழுவை யாழ். பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைதான பெண்களில் இருவர் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

Advertisement

கைதான குழு நல்லூர் கந்தசுவாமி ஆலயம், மடு மாதா தேவாலயத் திருவிழாக்களை இலக்கு வைத்தே வடக்குக்கு வந்துள்ளனர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆலயத் திருவிழாக்களில் பொதுவாக வடக்கில் பெண்கள் அதிகளவில் தங்க நகைகளை அணிந்து வருவது வழமை. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியே மேற்படி குழு நகைக் களவில் ஈடுபட்டது என்றும் தெரியவந்துள்ளது.

மேலும், மடு மாதா தேவாலயத் திருவிழாவில் 10 இற்கும் மேற்பட்ட பெண்களின் தங்க நகைகள் களவாடப்பட்டன. இவற்றின் பெறுமதி சுமார் 75 இலட்சம் ரூபாவிலும் அதிகமாகும்.

Advertisement

யாழ்ப்பாணத்தில் இந்தச் சம்பவம் தொடர்பில் ஆண்கள் இருவரும் பெண்கள் நால்வரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

 கைதான பெண்கள் குழுவுக்கும் மடுவில் கைதான பெண்கள் குழுவுக்கும் தொடர்பு உள்ளது என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இந்தியப் பெண்களுடன் கைதானவர்கள் குறி சொல்லும்தொழிலில் ஈடுபடுபவர்கள். அவர்கள் சிலாபம், தம்புதேகம பகுதிகளில் வசிப்பவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன