Connect with us

இலங்கை

வீடொன்றுக்குள் நுழைந்த வாள்வெட்டு குழுவின் கொடூரம் – கிளிநொச்சியில் சம்பவம்!

Published

on

Loading

வீடொன்றுக்குள் நுழைந்த வாள்வெட்டு குழுவின் கொடூரம் – கிளிநொச்சியில் சம்பவம்!

கிளிநொச்சி – பளை, சோரன்பற்று பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த கும்பல் நேற்று இரவு கொடூர தாக்குதல் மேற்கொண்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

Advertisement

சோரன்பற்று பகுதியில் உள்ள வீட்டிற்குள் நேற்று இரவு 08.30 மணியளவில் இனம் தெரியாத நபர்கள் உள்நுழைந்துள்ளனர்.

முகத்தை மறைத்து கத்தி, வாள்கள், பெற்றோல் குண்டுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் நான்கு நபர்கள் வீட்டிற்குள்  நுழைந்து உடமைகளை தாக்கி தீயிட்டுள்ளனர்.

இதில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள், கதவுகள், கண்ணாடிகள், குளிர்சாதனப்பெட்டி, அலுமாரிகள், ஏனைய பெறுமதியான ஆவணங்களுடன் பெறுமதியான வீட்டு உபகரணங்களும் அடித்து நொருக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது .

Advertisement

வீட்டில் இருந்தவர்கள் கூக்குரலிடத் தொடங்கியதும், தாக்குதலை மேற்கொண்ட நபர்கள் பெற்றோல் போத்தலையும் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டதன் பிரகாரம், பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன