இலங்கை
வவுனியா – ஓமந்தையில் வனவளத் திணைக்களத்தினர் துப்பாக்கிமுனையில் மிரட்டல்
வவுனியா – ஓமந்தையில் வனவளத் திணைக்களத்தினர் துப்பாக்கிமுனையில் மிரட்டல்
பொதுமக்கள் பரபரப்புக் குற்றச்சாட்டு
வவுனியா ஓமந்தை கொந்தக்காரன்குளம் பகுதியில், காணி ஒன்றில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தவர்களை வனவளத்திணைக்கள அதிகாரிகள் துப்பாக்கிமுனையில் அச்சுறுத்தியுள்ளனர் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:-
வவுனியா – ஓமந்தைப் பகுதியில் பொதுமக்கள் சிலர் இணைந்து காணியில் அபிவிருத்தி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது, அந்தக் காணிக்குச் சென்ற வனவளத்திணைக்கள அதிகாரிகள். ‘அரச காணிக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் ஒருவரைக் கைதுசெய்தனர். இதன்போது. காணியின் உரிமையாளர் எனத் தன்னை அடையாளப்படுத்திய நபர், வனவளத் திணைக்களத்தின் அத்துமீறலுக்கு எதிராகவும், நபரொருவர் கைது செய்யப்பட்டமைக்கு எதிராகவும் வனவளத்திணைக்கள அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. அத்துடன், வனவளத் திணைக்கள அதிகாரிகள் தன்னைத் துப்பாக்கிமுனையில் மிரட்டினார்கள் என்று காணியின் உரிமையாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபருக்கு எதிராக, அரச கடமைக்கு இடையூறு செய்த குற்றச்சாட்டின் கீழ் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. வவுனியா – ஓமந்தை உட்பட பல்வேறு பகுதிகளில் மக்களின் பாரம்பரியக் காணிகளில் வனவளத் திணைக்களம் எல்லைக்கற்களை நட்டு, தமது ஆளுகைக்கு உட்பட்ட இடமென சட்டவிரோதமாக அடையாளப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
