இலங்கை
ரணிலின் கைது; ஜனநாயக மீறல்; சந்திரிகா சீற்றம்
ரணிலின் கைது; ஜனநாயக மீறல்; சந்திரிகா சீற்றம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமையானது இலங்கையின் ஜனநாயகத்துக்குக் கடுமையான அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கடும் கவலை தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை நாட்டின் ஜனநாயக விழுமியங்கள் மீதான திட்டமிட்ட தாக்குதலுக்குச் சமம். அதன் தாக்கங்கள் ஒரு தனிநபர் அல்லது அரசியற் கட்சியைத் தரண்டி நீண்டுள்ளது. இந்த வளர்ச்சி ஒட்டு மொத்த சமூகத்தின் உரிமைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும். அனைத்து அரசியல் தலைவர்களும் இது போன்ற நடவடிக்கைகளை எதிர்க்க வேண்டும் – என்றார்.
