Connect with us

சினிமா

Siragadikka Aasai | மனோஜுக்கு செய்வினை வைத்தது இவரா..? வீடியோவால் வீட்டில் சலசலப்பு..!

Published

on

Siragadikka Aasai | மனோஜுக்கு செய்வினை வைத்தது இவரா..? வீடியோவால் வீட்டில் சலசலப்பு..!

Loading

Siragadikka Aasai | மனோஜுக்கு செய்வினை வைத்தது இவரா..? வீடியோவால் வீட்டில் சலசலப்பு..!

Advertisement

இன்றைய எபிசோடில் விஜயாவும், மனோஜும் ஜோசியர் சொன்னதுபடி, கோவிலில் தீச்சட்டி ஏந்தி பிரகாரத்தை சுற்றி வருகின்றனர். அந்தசமயத்தில் கோவிலுக்கு வரும் முத்துவும், மீனாவும் இருவரையும் பார்த்து ஷாக் ஆகின்றனர். பின் முத்து இருவரையும் வீடியோ எடுத்து வைத்துக்கொள்கிறார்.

பின் இருவரும் அங்கிருந்து கிளம்பிவிடுகின்றனர். ரவியும் ஸ்ருதியும் வீட்டில் இருக்கின்றனர். ரவி ஏன் பா வேலைக்கு போறீங்க என அண்ணாமலையிடம் கேட்கிறார். பாத்துக்கலாம் விடுடா என அண்ணாமலை சொல்லிக்கொண்டிருக்க அந்தசமயத்தில் வீட்டிற்கு வரும் முத்துவும் மீனாவும் அண்ணாமலையிடம் அந்த வீடியோவை காட்டுகின்றனர். பின் டிவியில் போட ரவியும் ஸ்ருதியும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். இதை பார்த்து ரோகிணி, மனோஜ் , விஜயா கடுப்பாகின்றனர்.

News18

பின் அண்ணாமலை இதெல்லாம் எதுக்கு பண்ணீங்க என கேட்கிறார். மனோஜ், ”எனக்கு யாரோ செய்வினை வெச்சிருக்காங்க. அதுக்கு பரிகாரமாதான் இப்படி செஞ்சோம்” என கூறுகிறார்.

Advertisement

பின் அண்ணாமலை “ ஒருவரை அழிக்க 3 முட்டை போதும்னா அப்போ உலகுத்துல யாரும் நல்லாவே வாழ முடியாது என்கிறார். இதை கேட்டு மீனாவும் “கரெக்ட் மாமா.. ஊர்ல எல்லோரும் பொறாமைப்பட்டு முட்டையில் செய்வினை வெச்சா முட்டைக்கு பஞ்சம்தான் வரும்” என்கிறார். உடனே விஜயா கோபப்பட்டு மீனாவை திட்டுகிறார்.

பின் இதெல்லாம் எப்படி நம்புர மனோஜ்.. இந்த உலகத்துல பெரிய சக்தினா அது தெய்வ சக்திதான். இந்த பில்லி சூனியத்தையெல்லாம் நம்புரனா கடவுள் மேல உனக்கு நம்பிக்கை இல்லைனு அர்த்தம். இதுக்குதான் உன்னை இவ்வளவுதூரம் படிக்க வெச்சேனா என கேள்வி கேட்கிறார் அண்ணாமலை. இதற்கு பதில் சொல்ல முடியாமல் மனோஜ் அப்படியே நிற்கிறார்.

Advertisement

உடனே விஜயா படிப்புக்கும் , இதுக்கும் என்ன சம்மந்தம். அவன் மேல யாரோ பொறாமை பட்டுதான் இப்படி செஞ்சிருக்காங்க என்கிறார். உடனே மனோஜ் விடுங்கமா சிரிக்கிறவங்க சிரிக்கட்டும். இனி நமக்கு எந்த பிரச்சனையும் வராது. எல்லா பரிகாரத்தையும் பண்ணிட்டோம். சில விஷயங்களை கேள்வி கேட்காம செய்யனும் சொல்லுவாங்க. அப்படிதான் இதுவும் என சொல்கிறார்.

அந்தசமயத்தில் கடையில் வேலை செய்யும் நபர் ஒருவர் கடை சாவியை வாங்க வருகிறார். அப்போது அவர் ”கடை வாசலில் இருந்த முட்டை ஏடிஎமில் வேலை பார்க்கும் தாத்தாவோடது” என்கிறார். அவருக்கு என்ன என் மேல காண்டு என மனோஜ் கேட்கிறார். அந்த நபர் “ அவரு பேரனோட வீட்டுக்கு போகும் போது மழை வந்திருக்கு. அப்போ நம்ம கடை வாசல்ல ஒதுங்கியிருந்துருக்காரு. அப்போ வீட்டுக்கு வாங்கி வெச்சிருந்த முட்டைல அவரோட பேரன் போர் அடிக்குதுனு கண்ணு மூக்குலா வரஞ்சிருக்கான் சார் என்று சொல்கிறார். இதை கேட்கும் குடும்பத்தினர் குபீரென விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். அத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைந்தது.

நாளைய எபிசோட் புரோமோவில் ரோகிணி பார்வதியிடம் நகையை வைத்து கொடுத்த 2 லட்சம் விஷயத்தை மீனாவிடம் சொல்கிறார். இதை கேட்டு குழப்பத்துடன் ஏதோ யோசிக்கிறார். அத்துடன் முடிகிறது. இதை வைத்து மீனா மேற்கொண்டு விசாரித்து உண்மையை கண்டுபிடிப்பாரா என்பது நாளைய எபிசோடில்தான் தெரிய வரும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன