இலங்கை
ஏரியில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு!
ஏரியில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு!
செவனகல பகுதியிலுள்ள ஹபுருகல போதிராஜா ஏரியில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் ஏரியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது குழியொன்றுக்குள் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
செவனகல பகுதியிலுள்ள மகாகம காலனியைச் சேர்ந்த 42 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் எம்பிலிப்பிட்டி மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
