Connect with us

இலங்கை

கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் நடத்த போராட்டத்தில் பொலிஸாரை தாக்கிய நபர் கைது!

Published

on

Loading

கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் நடத்த போராட்டத்தில் பொலிஸாரை தாக்கிய நபர் கைது!

கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ​​பொலிஸ் அதிகாரி ஒருவரை காயப்படுத்திய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 கடந்த 26 ஆம் திகதி பணியில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை போத்தலால் தாக்கி காயங்களை ஏற்படுத்தி பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் குழுவினால் சந்தேக நபர் களுத்துறையில் கைது செய்யப்பட்டார். 

Advertisement

 சந்தேக நபர் நேற்று (27) கைது செய்யப்பட்டு கொம்பனியவீதிய பொலிஸாரிடம் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 கைது செய்யப்பட்ட நபர் நாகொட, களுத்துறை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய முன்னாள் நகராட்சி உறுப்பினர் ஆவார். 

 சந்தேக நபர் இன்று (28) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Advertisement

கொம்பனியவீதிய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

images/content-image/1754511373.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன