இலங்கை
நல்லுரில் தவறவிட்ட பொருள்களைப் பெறுக
நல்லுரில் தவறவிட்ட பொருள்களைப் பெறுக
நல்லூர்க் கந்தசுவாமி ஆலய 2025ஆம் ஆண்டு வருடாந்தப் பெருந்திருவிழாக் காலத்தில் பக்தர்களால் தவறவிடப்பட்டு உற்சவக் காலப்பணிமனையில் ஒப்படைக்கப்பட்ட பொருள்கள் தற்போது மாநகரசபையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அவற்றின் உரிமையாளர்கள் தகுந்த ஆதாரத்துடன் அடையாளத்தை உறுதிப்படுத்தி மாநகரசபையின் நிர்வாகக் கிளையின் அலுவலக நாள்களில் அலுவலக நேரத்தில் எதிர்வரும் செப்ரெம்பர் 27 ஆம் திகதி வரை பெற்றுக் கொள்ளமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
