Connect with us

இலங்கை

இலங்கை மனித புதைகுழிகள் குறித்து ஐ.நா வலியுறுத்து

Published

on

Loading

இலங்கை மனித புதைகுழிகள் குறித்து ஐ.நா வலியுறுத்து

இலங்கையில், அண்மையில் மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் உள்ளிட்ட பலரின் மனித என்புக்கூடுகள் மற்றும் தனிப்பட்ட உடைமைகள் என்பன, கடந்த கால மனித உரிமை மீறல்களின் அளவையும், நம்பகமான, வெளிப்படையான மற்றும் சுயாதீன விசாரணைகளுக்கான அவசரத் தேவையையும் வலியுறுத்துவதாக இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் தெரிவித்துள்ளார்.

சர்வதேச காணாமல் போனோர் தினமான இன்று அறிக்கையொன்றைய வெளியிட்டு, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

ஆயிரக்கணக்கான இலங்கையர்களின் கதி என்னவென்று தெரியவில்லை என்றும் இது “மௌனம், செயலற்ற தன்மை மற்றும் தண்டனையின்மையால் ஏற்பட்ட ஒரு “தேசிய காயம்” ஆகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அன்புக்குரியவரைப் பற்றிய பதில்கள் இல்லாமல் விடப்படும் வலி, காலத்தால் மட்டுமே குணப்படுத்த முடியாத ஒரு அதிர்ச்சி என்றும் உண்மை மற்றும் நீதி இல்லாததால் துன்பம், ஆழமடைகிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச காணாமல் போனோர் தினம் அனைத்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நினைவை மதிக்கும் ஒரு நாள் என்றும், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் இந்த மீறலை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளவோ, மன்னிக்கவோ அல்லது மறக்கவோ கூடாது என்பதை நினைவூட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

நீதி, உண்மை மற்றும் இழப்பீடுகள் ஆகியவை நல்லிணக்கம், நிறுவனங்கள் மீதான நம்பிக்கை மற்றும் இலங்கையர்கள் நீண்டகாலமாகத் தேடிக்கொண்டிருக்கும் நிலையான அமைதியின் பிரிக்க முடியாத அடித்தளங்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வலுக்கட்டாயமாக காணாமல் போவதிலிருந்து அனைவரையும் பாதுகாப்பதற்கான சர்வதேச மாநாட்டை அங்கீகரிப்பது மற்றும் காணாமல் போனவர்கள் மீதான அலுவலகம் (OMP) மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் ஆகியவற்றை நிறுவுவது உட்பட இந்த வேதனையான மரபை நிவர்த்தி செய்வதற்கு இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளது என்று ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள் எதிர்கொள்ளும் கண்காணிப்பு, அச்சுறுத்தல்கள், மிரட்டல் மற்றும் பழிவாங்கல்கள் குறித்தும் ஐக்கிய நாடுகள் சபை கவலை கொண்டுள்ளது.

Advertisement

இந்த நிலையில், தங்கள் உரிமைகளைப் பயன்படுத்துவதில் ஈடுபட்டுள்ள அனைவரும் தண்டிக்கப்படக்கூடாது, பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, ​​ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர், காணாமல் போனவர்களின் குடும்பங்களைச் சந்தித்து உண்மையை வெளிக்கொணர்வது ஒரு அடிப்படை உரிமை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியிருந்தார்

மனித புதைகுழி தொடர்பில் விசாரிக்க அவர் விடுத்த அழைப்பு, கடந்த காலத்தை தைரியத்துடனும் வெளிப்படைத்தன்மையுடனும் எதிர்கொள்ள வேண்டியதன் அவசரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

Advertisement

இந்த செயல்பாட்டில் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து ஆதரவை வழங்குகிறது.

இந்த நாளிலும், ஒவ்வொரு நாளும், தங்கள் அன்புக்குரியவர்களைத் தேடும் ஒவ்வொரு குடும்பத்துடனும் ஐக்கிய நாடுகள் சபை உறுதுணையாக நிற்கிறது.

பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பங்கள் உண்மை, நீதி, இழப்பீடுகள் மற்றும் மீண்டும் நிகழாததற்கான உத்தரவாதங்களுக்கான உரிமைகளை உணர முடியும் என்பதை உறுதி செய்வதற்காக, வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த நம்பகமான, சுயாதீனமான விசாரணைகளை ஆதரிப்பதில் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து உறுதியாக இருப்பதாக, இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன