Connect with us

இலங்கை

செவ்வந்தியுடன் தொலைபேசியில் கதைத்து வரும் சந்தேகநபர்! விசாரணைக்காக அனுமதி கேட்ட பொலிஸ்

Published

on

Loading

செவ்வந்தியுடன் தொலைபேசியில் கதைத்து வரும் சந்தேகநபர்! விசாரணைக்காக அனுமதி கேட்ட பொலிஸ்

பொலிஸாரால் தேடப்படுகின்ற இஷாரா செவ்வந்தி என்ற பெண்ணுடன் தொடர்புகளைப் பேணி வரும் மற்றுமொரு சந்தேகநபர் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன என்று கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். போதரகமவிடம் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் வைத்து கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி “கணேமுல்ல சஞ்சீவ” சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

Advertisement

அவரின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏனைய சந்தேகநபர்களைத் தவிர்த்து புதிதாக கண்டறியப்பட்டுள்ள இந்த நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு கொழும்பு பிரதான நீதிவானிடம் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள இந்தச் சந்தேகநபர் இஷாரா செவ்வந்தியுடன் தொலைபேசியில் தொடர்புகளைப் பேணி வருகின்றார் எனத் தகவல்கள் கிடைத்துள்ளன என்று கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன