இலங்கை
புகையிரதத்துடன் மோதி பெண் சாவு!!
புகையிரதத்துடன் மோதி பெண் சாவு!!
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். சுன்னாகத்தை சேர்ந்த உஷாநத் சங்கீதா (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி இன்றையதினம் புதன்கிழமை பயணித்த புகையிரதத்துடன் கொடிகாம பகுதியில் மோதி உயிரழந்துள்ளார்.
தண்டவாளத்தை கடக்க முற்பட்ட வேளையே விபத்து இடம்பெற்றதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
